வெள்ளி, 11 செப்டம்பர், 2009

நான்காம் ஈழபோர் -- ஒரு பார்வை -- 1 :

நான்காம் ஈழபோரில் புலிகளின் தோல்வி குறித்து ஆராயும் போது பலரும் , புலிகளின் பலம் மிகையாகச் சித்தரிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.புலிகளைப் பொறுத்தவரையில் சுமார் 20000 போராளிகளுடன் பலமாகவே இருந்தார்கள்.யுத்தத்தின் இறுதியில் ஆயுத பலத்தில் சற்று பின்னடைவைச் சந்தித்தார்கள்.
ஒரு அரசுக்கிணையான தரைப்படையும் , கடற்படையும் அவர்களிடம் இருந்தபோதிலும் வலுகுறைவான வான்படையைக்கொண்டு அவர்களால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.ஒரு அங்கிகரிக்கப்பட்ட அரசாக இல்லாத காரணத்தால் அவர்களிடம் பெரும் பணமிருந்தும் போர் விமானங்கள் வாங்க முடியவில்லை.விமானங்களுக்குத் தேவையான எரிபொருள் சேமிப்பு வசதியும் மிகக்குறைவான அளவிலேயே அவர்களிடம் இருந்தது.அதையும் மறைத்தே வைக்க வேண்டிய சூழல்.சிறிய விமானங்களைக்கொண்டு அவர்களால்பெறும் சேதங்களை ஏற்படுத்த முடியவில்லை. இது தவிர துல்லியமான உளவுத்தகவலால் அவர்களின் ஆயுதக்கப்பலை இந்தியா கவிழ்த்தது. புலிகளின் நடமாட்டம் செய்மதி ஊடாக நோட்டம் பார்க்கப்பட்டதால் பெறும்நகர்வுகளை அவர்களால் மேற்கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு எஞ்சியிருந்த ஒரே வழி பெறும் எண்ணிக்கையிலான ராணுவத்தினருடன் சிறு சிறு அணிகளாகப் போரிடுவதே. இலங்கை ராணுவத்துக்கு அவர்களது விமானப்படை மிகப்பெறும் பலம். புலிகளிடம் பலமுறை தோற்று மனவுறுதி குலைந்த அவர்களுக்கு அவர்களின்விமானப்படை பக்கபலமாக இருந்தது. இந்தியா மற்றும் சீனாவிடமிருந்து தங்கு தடையின்றி ஆயுதங்கள் அவர்களுக்குக் கிடைத்தது. போர் விமானங்கள் குண்டு மழை பொழியும் போது எவ்வளவு பயிற்சி பெற்றாலுமதற்காப்புச்சமர் எளிதானதல்ல.
சரி , புலிகளின் பலவீனம் பிரபாகரனுக்குத் தெரியாதா ? கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். ஆயுதத் தட்டுப்பாடு,செய்மதி ஊடான உளவுத்தகவல் , இலங்கை ராணுவத்துக்கு மற்ற நாடுகளின் தொடர்ச்சியான ராணுவ உதவிபோன்ற பல இக்கட்டான சூழலில் நான்காவது ஈழப் போரில் பெரும் தோல்வி ஏற்படும் என்பதை அவர் உறுதியாக
தெரிந்தே வைத்திருப்பார். இவையெல்லாம் 30 ஆண்டுகள் போராட்டம் நடத்திய ஒரு பெரும் இயக்கத்தின் தலைவன் ஊகிக்கக்கூடிய விசயங்களே. தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் வீழ்வதற்கு 6 மாதத்திற்கு முன்னரே போரில் தங்கள் நிலையை உணர்ந்திருப்பார். சர்வதேச சூழல் சரியாக இல்லாத நிலையில் , தோல்வி நிச்சயமெனினும் இலங்கை
ராணுவத்துக்கு பெருத்த இழப்பை ஏற்படுத்துவதே அவர்களது உத்தியாக இருந்ததை அனுமானிக்க முடிகிறது.
சாதரணமாக பிரபாவின் இருப்பிடம் மிக ரகசியமாக இருக்கும். ஆனால் யுத்ததின் இறுதி மாதங்களில் புலிகளின் பேச்சாளர்கள் , பிரபா அந்த குறுகிய நிலப்பரப்பிலேயே
இருப்பதாகச் சொன்னார்கள். புலிகளின் கனரக ஆயுதங்கள் மாயமாக மறையும் போது , பிரபா குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அடிக்கடி படையினரிடம் சிக்கியது.
பிரபா முற்றுகையில் அகப்பட்டதாக தகவல்கள் வெளியான போது சுமார் 40000 படை வீரர்கள் அந்த குறுகிய நிலப்பரப்பில் குவிந்திருந்தார்கள். நான்கு மாதங்கள் உக்கிரமாக
நடந்த அந்த போரில் பல ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டனர் , பல ஆயிரம் வீரர்கள் ஊனமானார்கள். இலங்கையின் ராணுவ அதிகாரிகளின் கூற்றுப்படி குறைந்த எண்ணிக்கையிலான வீரர்களே எஞ்சியிருக்கிறார்கள். அதனால் தான் போர் முடிந்த பின்னும் இன்னும் 50000 முதல் 100000 வீரர்கள் தேவை என அரசு கூறுகிறது. ராணுவத்தைப்
பொறுத்தமட்டில் , முன்னுக்குப்பின் முரணாகப் பேசுகிறார்கள். 65000 வீரர்கள் ஓடிவிட்டதாகச் சொன்னார்கள். இறந்த வீரர்களையும் ஓடிப்போனவர்களின் பட்டியலில் சேர்த்திருப்பார்கள். 25000 முதல் 30000 வீரர்கள் அங்கவீனமாகிப்போனார்கள் . சுயாதீனமான விசாரணை இலங்கையில் சாத்தியமில்லாததால் ராணுவத்தின் உண்மையான இழப்பு
வெளியே தெரியாமலேயே போய்விடும் வாய்ப்புகள் அதிகம்.
புலிகளைப் பொருத்த வரையில் பெரும் தோல்வியடைந்தாலும் , என்னுடைய அனுமானப்படி கணிசமான எண்ணிக்கையிலான புலிகள் முன்பே வேறு தளங்களுக்குச்
சென்றிருப்பார்கள். 5000 முதல் 6000 வரையிலான போராளிகள் இறுதிவரை போராடி வீரச்சாவெய்தியிருப்பார்கள்.
பிரபாவும் , பொட்டு அம்மானும் மற்ற முன்னனித் தளபதிகளும் இறுதிவரைப் போரை வழி நடத்தி பின்பு தப்பியிருப்பார்கள் என்றே கருதுகிறேன்.
ஐந்தாம் கட்டப்போர் விரைவில் தொடங்கும் என்றே நான் நினைக்கிறேன்.